
திருவாசகம் – திருக்கோத்தும்பி – பாடல் 4
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பனித்தென்னை வாவென்ற வான்கருணை
சுன்னப்பொன் நீற்றற்க்கே சென்றூதாய் கோத்தும்பி
பதப்பொருள்:
ஏ அரச வண்டே! கண்ணப்பருக்கு ஒப்பான அன்பு என்னிடத்தில் இல்லாமை அறிந்தும்
என் தந்தை எதனோடும் ஒப்பில்லாத என்னையும் அடிமையாக ஆட்கொண்டருளி
யான் வணங்க வேண்டிய வகையை தெரிவித்து
என்னைத் தில்லைக்கு வருக என்று அருளிய
வான்கருணையையுடைய அழகிய திருநீற்றை யணிந்தவனிடத்தே சென்றூதுவாயாக.
#திருவாசகம்
#Thiruvasagam
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.