43வது சென்னை புத்தகக் கண்காட்சி
இன்று சென்னைப்புத்தக கண்காட்சி யில் சிறந்த எழுத்தாளர்கள், பேச்சாளர்களை சந்திக்க முடிந்தது.
முதலில் Yukendran Kamaraj ஐ சந்தித்தேன். Discovery book palace இல் ந. முருகேச பாண்டியன் அவர்களை சந்திக்க முடிந்தது. சிறந்த பேச்சாளர்.
Kannan Vijayakumar அவர்களை சந்திக்க முடிந்தது.
‘மழைக்கால ராத்திரியும் மூன்று கனவுகளும்’ என்ற அவரின் புத்தகத்தை கையெழுத்திட்டு கொடுத்தார்.

அங்கிருந்து ‘we can books’ Guhan Kannan ஐ பார்த்து விட்டு ‘ஆன்மீக அரசியல்’ , ‘இனப்படுகொலைகள்’ என இரண்டு புத்தகங்கள் வாங்கினோம். Babu Kumar க்காக ‘ஆன்மீக அரசியல்’.
தேசாந்திரியில் ‘இன்னொரு பறத்தல்’ வாங்க வேண்டும் என்று நினைத்து மூன்று புத்தகங்கள் வாங்கி விட்டேன். #எஸ்ராமகிருஷ்ணன் அவர்கள் மிகப்பொறுமையுடன் கையெழுத்திட்டு கொடுத்தார். மற்ற இரண்டு புத்தகங்கள் ‘மழைமான்’ , ‘ ரயில் நிலையங்களின் தோழமை’.
அத்தொடு சாப்பிட கிளம்பி விட்டோம்.
சாப்பிட்டு வந்தவுடன் கண்ணில் பட்டவர் எழுத்தாளர் Bhaskar Sakthi அவர்கள். ஏற்கனவே #Discoverybookpalace இல் ‘பூவரசம் வீடு’ , ‘கடலோர கிளிஞ்சல்கள்’ வாங்கி வைத்திருந்தேன். பொறுமையாக கையெழுத்து போட்டு கொடுத்தார்.
அண்ணன் Cable Sankar , மறுபடியும் We Can shopping இல் சந்திக்க முடிந்தது. சிறிது நேரம் கழித்து அண்ணன் மணி ஜி பற்றி பேச்சு வர பேலியோ Stall இல் அவரைச் சென்று சந்திக்க முடிந்தது.
#CBF2020 #43வதுசென்னைபுத்தகக்கண்காட்சி #43CBF2020 #43rdChennaiBookFair
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.