எழுத்தாளர் சோம வள்ளியப்பன் அவர்களுடனான  சந்திப்பு

எழுத்தாளர், நிதி மேலாண்மை நிபுணர் , பொருளாதார வல்லுநர், மனித வள மேம்பாட்டு ஆலோசகர், பயிற்சியாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் Soma Valliappan அவர்கள்.

எழுத்துலகில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளுமை.

எழுத்தாளுமைகளில் என்னை உற்றுநோக்குபவர் மற்றும் சுலபமாக என்னை புரிந்து கொள்பவர்.

நேற்று(14-Jan-2026) அவரை சந்தித்து சிவஷங்கர் ஜெகதீசன் ஃபவுண்டேஷன் டைரியை வழங்கியது மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

நம் #வாசிப்புப்போட்டி2023 விழாவின் போது 80 புத்தகங்கள் முடித்திருந்தவர் இப்போது 95 புத்தகங்கள் எழுதி முடித்து விட்டார்.

புத்தகம் # 96, #97 #98 வேறு இப்போது எழுதி முடிக்கும் தருவாயில் இருக்கிறார்.

2024 – எழுத்துலகில் அவருடைய 25 ஆம் ஆண்டு.

#வாசிப்புப்போட்டி2023 விழாவிற்கு அழைக்கும் போது, அவருடைய புத்தகங்களை பற்றி மட்டுமே ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி செய்யலாம் என வாக்குறுதி அளித்திருந்தேன்.

ஆனால் அதை 2 வருடமாக செய்ய முடியவில்லை. இந்த வருடம் அந்த கலந்துரையாடல் + கொண்டாட்டத்தை செய்ய முடியும் என நம்புகிறேன்.

முந்தைய Book fair களில் அவர் பார்த்த விஷயங்கள், சந்தித்த மனிதர்கள் என நிறைய நேரம் பேச முடிந்தது.

பொருளாதாரம், நேர்பட பேசு என இரண்டு புத்தகங்கள் வாங்கியிருந்தேன்.

நம் #வாசிப்புப்போட்டி2023 நிகழ்வில் “கனகாம்பரம்” கதை பற்றி பேசியதை நினைவு கூர்ந்தார்.

பொறுமையாக கையெழுத்திட்டு கொடுத்து உடல் எடை குறைத்ததற்கு வாழ்த்தினார்.

#49thChennaiBookFair
#49வதுசென்னைபுத்தகக்க்காட்சி
#chennaibookfair2026
#CBF2026
#ChennaiBookFair #bookstagram #tamilbookreaders #tamilbooks
#TamilLiterature #literature #tamil #book #tamilauthors  #tamilpoetry #tamilbookstagram #booksofinstagram #tamilbookstagram #readersofinstagram
#சோமவள்ளியப்பன்
#SomaValliappan
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.